உச்சநீதிமன்ற தீர்ப்பு: ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க முடியாது என திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க முடியாது என திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் காசிராஜ தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கோயிலுக்குள் வெடி, வெடித்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதேபோன்று இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரும் கீழசன்னதியில் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்த சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Advertisement