முகப்பு
தற்போதைய செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பு: ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க முடியாது என திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க முடியாது என திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் காசிராஜ தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கோயிலுக்குள் வெடி, வெடித்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதேபோன்று இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரும் கீழசன்னதியில் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்த சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments