தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பாம்பன் துறைமுகத்திலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.