தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
நடராஜர் கோயிலை அரசு ஏற்க தனி சட்டம் கொண்டு வரக்கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடராஜர் கோயிலை அரசு ஏற்க தனி சட்டம் கொண்டு வரக்கோரி சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோ.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் மா.கோ.தேவராசன், மு.சம்பந்தம், வே.சுப்பிரமணியசிவா, மதிவாணன், சுகன்ராஜ், மோகன், கார்த்திக், தமிழக இளைஞர் முன்னணி ஆ.குபேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.