கரூர் அருகே பொங்கல் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.
கரூர் அருகே உள்ள லாலாப்பேட்டை மேலவேட்டுக்கட்டியில் புதன்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமாரின் மகன்கள் பிரேம் ஆனந்த்(24), தேவ்ஆனந்த், கவுதம் ஆனந்த் மற்றும் ராமு மகன் சரவணன், சத்தியசீலன், விஜயராகவன், பிரகாஷ் உள்ளிட்டோர் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அதே பகுதியைச்சேர்ந்த மற்றொரு சரவணன்(24), சங்கர்(29), கீழசிந்திலவாடியைச் சேர்ந்த ராஜசேகர்(23) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் கோஷ்டியாக மோதிக்கொண்டனர்.
இச்சம்பவத்தில் காயம் அடைந்த சரவணன், சங்கர், ராஜசேகர், பிரேம் ஆனந்த்,விஜயராகவன் ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்த புகாரின்பேரில் இருதரப்பினரையும் சேர்ந்த அனைவரும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தேவ்ஆனந்த் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.