விருதுநகர் அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது
விருதுநகர் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் அருகே சின்னப்பேராளியைச் சேர்ந்தவர் ரமேஷ்(30). இப்பகுதியில் கொத்தனராக வேலைபார்த்து வருகிறார்.
விருதுநகர் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் அருகே சின்னப்பேராளியைச் சேர்ந்தவர் ரமேஷ்(30). இப்பகுதியில் கொத்தனராக வேலைபார்த்து வருகிறார்.
இவரது மனைவி கச்சம்மாள்(29). நாள்தோறும் வேலை செய்யும் பணத்தில் குடித்து விட்டு வீட்டிற்கு வருவராம். இது தொடர்பாக இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதேபோல், சனிக்கிழமை இரவும் அதிகமாக குடித்து வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, ஆத்திரம் அடைந்த நிலையில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Advertisement
அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.