சஞ்சய் தத்திற்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
மும்பையில் 1993 ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தற்போது பரோலில் வெளியே
மும்பையில் 1993 ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தற்போது பரோலில் வெளியே உள்ளார். தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு, பரோலை மேலும் 30 நாட்கள் நீடித்து உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் தத்தின் பரோல் வரம் ஜன.21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.