முகப்பு
தற்போதைய செய்திகள்

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க கேஜ்ரிவால் முயற்சி: ஞானதேசிகன் குற்றச்சாட்டு

 ஆம் ஆத்மி கட்சியினர் குடியரசு தினவிழா அணிவகுப்பை சீர்குலைப்பதற்காகவே போராட்டம் நடத்தி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

 ஆம் ஆத்மி கட்சியினர் குடியரசு தினவிழா அணிவகுப்பை சீர்குலைப்பதற்காகவே போராட்டம் நடத்தி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சி தேச விரோதமாக தெருவில் இறங்கி போராடி வருவதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் ஞானதேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் இந்த போராட்டத்தின் மூலம் தன்னுடைய கட்சியை பலப்படுத்த கேஜ்ரிவால் முயல்வதாகவும், மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.