முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே முகமூடி அணிந்து, வீட்டில் கொள்ளை

திருத்துறைபூண்டி ஆத்தூர் சாலையை சேர்ந்தவர் கணேசன் மகன் முருகேசன் 54 இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

திருத்துறைபூண்டி ஆத்தூர் சாலையை சேர்ந்தவர் கணேசன் மகன் முருகேசன் 54 இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பினார்.

நேற்று இரவு அவர் வீட்டில்  இருந்து வெளியில் சென்றிருந்த போது முருகேசன் மனைவி மற்றும் அவரது சித்தி வள்ளியமமை ஆகியோர் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள் 4பேர் வந்து வள்ளியம்மை மற்றும் முருகேஷன் மனைவி ஆகிய இருவரையும் தாக்கி பீரோவில் இருந்து 1 லட்சம் ரொக்கம் தாலி உட்பட 1 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறை பூண்டி டி.எஸ்.பி. அப்பாசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டார். திருவாரூரில் இருந்து மோப்ப நாயும், தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைகப்பட்டனர். போப்ப நாய் வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரம் சென்று ஒரு பாணிப்பூரி கடையின் அருகே படுத்துகொண்டது. மேலு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →