முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி மலைக்கோயிலில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் அதிமுகவினர் தங்கத்தேர் புறப்பாடு

பழனி மலைக்கோயிலில் நாள்தோறும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்று வருகிறது.  தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத்தேர் புறப்பாடுக்கு பணம் கட்டி புறப்பாடு நடத்தும் நிலையில் பக்தர்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

பழனி மலைக்கோயிலில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் தொகுதி அதிமுகவினர் 10 நிலைகளுக்கும் தங்கத்தேருக்கு பணம் கட்டி புறப்பாடு செய்தனர்.

பழனி மலைக்கோயிலில் நாள்தோறும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்று வருகிறது.  தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத்தேர் புறப்பாடுக்கு பணம் கட்டி புறப்பாடு நடத்தும் நிலையில் பக்தர்கள் நலன்கருதி தேர் இழுக்க மலைக்கோயில் பிரகாரத்தில் முதல் நிலை மற்றும் 9 நிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் பிரதமராக வேண்டும் என்றும் பல்லடம் அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் நகர செயலாளர் சரளை ரத்தினசாமி தலைமையில் தங்கத்தேர் புறப்பாடு செய்தனர். 

நிகழ்ச்சியில் தங்கத்தேர் புறப்பாடு நடக்கும் 10 நிலைக்கும் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பணம் கட்டி புறப்பாடு செய்யப்பட்டது.  சாயரட்சையின் போது முதல்வர் பெயரில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகளும் செய்யப்பட்டது.  நிகழ்ச்சியில் நகர பொருளாளர் தர்மராஜ், நகர துணை செயலாளர் பாரதி செல்வராஜ், அம்மாபேரவை செயலாளர் ராஜேந்திரன்,அம்மாபேரவை தலைவர்  வைஸ் பழனிச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ரட்சியினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.