முக்கிய திட்டங்களுக்கு வரும் பிப்.க்குள் சுற்றுச்சூழல்அனுமதி: வீரப்பமொய்லி
சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததால் முடங்கியுள்ள 55 முக்கிய திட்டங்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் அனுமதி தரவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி
சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததால் முடங்கியுள்ள 55 முக்கிய திட்டங்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் அனுமதி தரவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்..
சுற்றுசூழல் அமைச்சராக பொறுப்பேற்ற முதல் 3 வாரங்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் மொய்லி தெரிவித்துள்ளார். இதில் ஒதிஷா மாநிலத்தில் போஸ்கோ நிறுவனம் அமைக்கும் இரும்பாலை திட்டமும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.. சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி நாட்டுநல திட்டங்கள் கால தாமதம் ஆவதை தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் மொய்லி கூறினார்.