மதுரை விமான நிலையத்தில் ஆசனவாயில் தங்கக் கட்டி கடத்திய நபர் மீது விசாரணை
மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பயணி ஒருவரை சோதனியிட்ட போது, அவர் 513 கிராம் தங்கக் கட்டிகளை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 17 லட்சத்து 33 ஆயிர
மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பயணி ஒருவரை சோதனியிட்ட போது, அவர் 513 கிராம் தங்கக் கட்டிகளை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 17 லட்சத்து 33 ஆயிரம் என்று தெரியவந்தது. ஜபருல்லா என்ற அந்த நபர், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்றும், துபாயில் இருந்து கொழும்பு வந்து, பின்னர் மதுரைக்கு அவர் வந்துள்ளார் என்றும் தெரியவந்தது. அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை இட்ட போது, தங்கத்தை பதுக்கு வந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.