முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த புலி: பெண் தப்பி ஓட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த புலி அங்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கடித்து கொன்றது. ஆடுக்குட்டியை தேடி சென்ற பெண் புலியிடம் சிக்காமல் தப்பினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த புலி அங்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கடித்து கொன்றது. ஆடுக்குட்டியை தேடி சென்ற பெண் புலியிடம் சிக்காமல் தப்பினார்.

வள்ளியூர் அருகே வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு சொந்தமான தோட்டம் கேசவனேரியில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் மக்காச்சோளம், வாழை போன்றவை பயிரிடப்பட்டு்ள்ளது. தோட்டத்தில் நம்பி்பத்து அழகப்புரத்தை சேர்ந்த திருமால், இவரது மனைவி சாந்தி ஆகியோர் தங்கி ஆடு மேய்த்து வருகின்றனர்.

வியாழக்கிழமை சோளத் தோட்டத்திற்குள் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை தேடி சாந்தி சென்றாராம். மேயச்சலுக்கு சென்ற ஆடுகளில் 2 ஆடுகள் கழுத்தில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்ததாம். அப்போது தோட்டத்துக்குள் புலி உறுமும் சத்தம் கேட்டு சாந்தி அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து ஓடிய சாந்தியை புலி விரட்டியதாக கூறப்படுகிறது. மின்னல் வேகத்தில் சாந்தி தப்பி ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தார். கேசவனேரி மக்கள் தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த திருமாலை மீட்டு வந்தனர். தகவலறிந்த திருக்குறுங்குடி வனத்துறையினர் புலியை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →