கிராவல் குவாரியில் பொக்லைன் இயந்திரம் மோதி டிராக்டர் டிரைவர் பலி
கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் பகுதியில் இயங்கி வரும் கிராவல் குவாரியில் புதன்கிழமை மண் அள்ளும் பொக்லைன் இயந்திரம் மோதியதில் டிராக்டர் டிரைவர் ராமலிங்கம்(45) சம்பவ இடத்திலேயே பலியானார்.
தற்போதைய செய்திகள்கிராவல் குவாரியில் பொக்லைன் இயந்திரம் மோதி டிராக்டர் டிரைவர் பலி
கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் பகுதியில் இயங்கி வரும் கிராவல் குவாரியில் புதன்கிழமை மண் அள்ளும் பொக்லைன் இயந்திரம் மோதியதில் டிராக்டர் டிரைவர் ராமலிங்கம்(45) சம்பவ இடத்திலேயே பலியானார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் பகுதியில் இயங்கி வரும் கிராவல் குவாரியில் புதன்கிழமை மண் அள்ளும் பொக்லைன் இயந்திரம் மோதியதில் டிராக்டர் டிரைவர் ராமலிங்கம்(45) சம்பவ இடத்திலேயே பலியானார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் பகுதியில் அரசின் அனுமதியோடு ஞான பிரகாசம் என்பவர் கிராவல் குவாரியை நடத்தி வருகின்றார். இந்த குவாரியில் இருந்து கிராவல் மண் பல பகுதிகளுக்கு டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த குவாரியில் அதே பகுதியை சேர்ந்த நைனா கண்ணு மகன் ராமலிங்கம் அவரது சொந்த டிராக்டரை வைத்து கிராவல் மண் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் இவர் கிராவல் எடுக்கும் பகுதியில் டிராக்டரை நிறுத்தி விட்டு கிராவல் எடுக்க உரிய ரசீதை எடுத்துக் கொண்டு அருகில் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மண் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் பக்கெட் இவரது தலையில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த குவாரியில் குவிந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொன்னேரி ஆர்.டி.ஓ மேனுவேல் ராஜ், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி சிவராஜ், பொன்னேரி தாசில்தார் முரளி விரைந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து பலியான ராமலிங்கத்தின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து பொக்லைன் இயந்திர டிரைவரான செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாஷா மகன் சர்தார்(21) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்..