திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக விரிவுரையாளர் பதவிக்கு 16 இல் நேர்முக தேர்வு
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர் பதவிக்கு, பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின்படி கல்வித் தகுதியுடையவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ், ஆங்கிலம்,
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக விரிவுரையாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக இப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) டி.தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர் பதவிக்கு, பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின்படி கல்வித் தகுதியுடையவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ், ஆங்கிலம், சமூகவியல், தொடர்பியல், வணிகவியல், மேலாண்மையியல், கல்வியியல், உடற்கல்வியியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பொறியியல், செயல்முறை மின்னணுவியல் (முதுநிலை பொறியியலில் மின்னியல் மற்றும் தொடர்பியல் அல்லது அதற்கு சமமான பிரிவு) புள்ளியியல், உயிரி தொழில்நுட்பவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் அறிவியல், விலங்கு அறிவியல், தாவர அறிவியல், உளவியல், குற்றவியல் மற்றும் குற்றநீதியியல், புவிதொழில்நுட்பவியல், தகவல் தொழில் நுட்பவியல், பொறியியல் ஆகிய துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கான நேர்முகத்தேர்வு இம் மாதம் 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். தாற்காலிக விரிவுரையாளராகத் தேர்ச்சி பெறுகிறவர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் தேசிய, மாநில அளவில் தகுதிகாண் தேர்வு (நெட், ஸ்லெட்) பெற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரமும், முதுநிலை, இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், முதுநிலை பொறியாளர், முதுநிலை தொழில்நுட்பவியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரமும் மாத தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.