சிதம்பரம் அருகே பிடிபட்ட பெண் மயில்: மீண்டும் காட்டில் விடப்பட்டது
சிதம்பரம் அருகே துறிஞ்சிக்கொல்லை கிராமத்தில் மயங்கிய நிலையில் கிடந்த மயிலை ஊராட்சி மன்றத் தலைவர் சுபேதா செல்வநாதன் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனவர் பி.சோமசுந்தரம் மற்றும் வனக்காவலர்கள்
சிதம்பரம் அருகே துறிஞ்சிக்கொல்லை கிராமத்தில் பிடிபட்ட பெண் மயில் காட்டில் விடப்பட்டது.
சிதம்பரம் அருகே துறிஞ்சிக்கொல்லை கிராமத்தில் மயங்கிய நிலையில் கிடந்த மயிலை ஊராட்சி மன்றத் தலைவர் சுபேதா செல்வநாதன் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனவர் பி.சோமசுந்தரம் மற்றும் வனக்காவலர்கள் சென்று மயிலை பெற்று புவனகிரி அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பாதுகாப்பாக வைத்திருந்து பறந்து போகும் நிலைக்கு வந்தவுடன் செவ்வாய்க்கிழமை வனத்துறையினரால் கார்மாங்குடி காப்புக்காட்டில் கொண்டு விடப்பட்டது.