முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோவில் பயணிக்கும் மாணவர்கள்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதிக்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் பள்ளி முடித்து வீடு திரும்பவும் உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் ஆட்டோக்களில் முண்டி அடித்து பயணம்

தற்போதைய செய்திகள்

பள்ளி நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோவில் பயணிக்கும் மாணவர்கள்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதிக்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் பள்ளி முடித்து வீடு திரும்பவும் உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் ஆட்டோக்களில் முண்டி அடித்து பயணம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதிக்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் பள்ளி முடித்து வீடு திரும்பவும் உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் ஆட்டோக்களில் முண்டி அடித்து பயணம் செல்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு ஆரம்பாக்கம், ஏடூர், கும்புளி போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை படிக்க செல்கின்றனர்.இந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலை நேரத்திலும், பள்ளி முடிந்ததும் வீடு திரும்ப மாலை நேரத்திலும் உரிய பேருந்து வசதி இல்லாததால் இவர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக ஏடூர், கும்புளி போன்ற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனியார் பேருந்து வசதி கூட இல்லை. எனவே இவர்கள் ஆட்டோக்களில் தினமும் 20 ரூபாய் கொடுத்து பள்ளிக்கு வந்து போகின்றனர்.

காலையில் பள்ளி நேரத்திற்கு ஏற்றார் போல இல்லாமல் இப்பகுதி வழியே கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் பேருந்து மாலையில் பள்ளி விடுவதற்கு முன்பேயே சென்று விடுகிறது. எனவே மாணவர்கள் அரசு தரும் இலவச பஸ் பாûஸ கூட பயன்படுத்த இயலுவதில்லை. அத்தோடல்லாமல் ஆட்டோ பயணம் பல நேரங்களில் ஆபத்து பயணமாகவும் மாறி உள்ளது.

எனவே இப்பகுதி மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏடூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நகர பேருந்து வசதியை ஏற்படுத்தி தர அரசு ஆவண செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →