மம்சாபுரத்தில் ரௌடி வெட்டிக் கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் ரௌடி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் ரௌடி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மம்சாபுரம், காந்திநகரைச் சேர்ந்தவர் ரௌடி ராமச்சந்திரன் (45). இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி, ஒரு மகன் ஒரு மகள் உண்டு. இவர் மேல் பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த ராமச்சந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், யார் கொலை செய்தார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.