நாகை மீனவர்கள் 50 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு
நாகையிலிருந்து 5 விசைப் படகுகளில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் 50 பேர் திங்கள்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகையிலிருந்து 5 விசைப் படகுகளில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் 50 பேர் திங்கள்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 5 படகுகளும் நாகை அக்கரைப்பேட்டை மீனவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இருப்பினும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது காலை 10 மணி வரை உறுதியாகவில்லை.
இது தொடர்பாக நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும், மீன்வளத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.