தாய்லாந்து நாட்டு டீசல் எண்ணெய் கப்பல் எம்.டி. ஆரபின் -4 சிங்கப்பூர் முனையத்தில் இருந்து புறப்பட்ட போது சிறது நேரத்தில் அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது.
இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச கடல் முனையம் தெரிவித்துள்ளது. மேலும் சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இந்தோனேசியா நோக்கி பயணித்த இந்த கப்பலில் 14 சிப்பந்திகள் இருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவில் ஒரு எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டது, அதில் இருந்து 3மில்லியன் லிட்டர் டீசல் திருடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.