முகப்பு
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி மணல் அள்ளிய  2 பேர் கைது: லாரிகள் பறிமுதல்

கரூர் வாங்கல் அருகே மண்மங்கலம்-என்.புதூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி லாரிகளில் மணலைக் கடத்தி வருவதாக வாங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து

Updated On : 3 மார்ச், 2014 at 4:53 PM
பகிர்:

கரூர் வாங்கல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 லாரிகளையும் போலீஸார் கைது செய்தனர்.

கரூர் வாங்கல் அருகே மண்மங்கலம்-என்.புதூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி லாரிகளில் மணலைக் கடத்தி வருவதாக வாங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் சிவாயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு டிப்பர் லாரிகளில் மணலைக் கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவைச் சேர்ந்த பேரண்டஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ்(25), ஓசூர் பிலாத்தூர் ஜீவாநகரைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.