பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் நகைகள் திருட்டு!
சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மகேஷ்ஸ்ரீ (32) வியாழக்கிழமை மாலை கண்ணங்குடியிலிருந்து சிதம்பரம் வந்து, மேலரதவீதி கஞ்சித்தொட்டி
சிதம்பரத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 7 பவுன் நகைரளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மகேஷ்ஸ்ரீ (32) வியாழக்கிழமை மாலை கண்ணங்குடியிலிருந்து சிதம்பரம் வந்து, மேலரதவீதி கஞ்சித்தொட்டி பஸ்நிறுத்தத்தில் தம்பிக்குநல்லாம்பட்டினத்தில் உள்ள தாயாரை பார்க்க பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து வண்டிகேட் சென்று கொண்டிருந்த போது தனது கைப்பையில் வைத்திருந்த நெக்லஸ், செயின், தோடு உள்ளிட்ட 7 பவுன் நகைகள் காணாதது கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து மகேஷ்ஸ்ரீ சிதம்பரம் நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.