பாரத ஸ்டேட் வங்கி லோக்அதாலத்: ரூ.5.76 லட்சம் வசூலிக்கப்பட்டது
லோக் அதாலத்தில் சப்-ஜட்ஜ் கே.ராதிகா, ஓய்வுபெற்ற நீதிபதிகள் முருகபூபதி, எல்.வீரநாதராவ் ஆகியோர் முன்னிலையில் வங்கி கடன் பாக்கி உள்ள 67 வாடிக்கையாளர்களிடம் சமரச முறையில் தீர்வு காணப்பட்டது. ரூ.
சிதம்பரம் சப்-கோர்ட் வளாகத்தில், சிதம்பரம் கிளை பாரத ஸ்டேட் வங்கியின் லோக்அதாலத் (மக்கள் நீதிமன்றம்) சனிக்கிழமை நடைபெற்றது.
லோக் அதாலத்தில் சப்-ஜட்ஜ் கே.ராதிகா, ஓய்வுபெற்ற நீதிபதிகள் முருகபூபதி, எல்.வீரநாதராவ் ஆகியோர் முன்னிலையில் வங்கி கடன் பாக்கி உள்ள 67 வாடிக்கையாளர்களிடம் சமரச முறையில் தீர்வு காணப்பட்டது. ரூ.96 லட்சத்து 41 லட்சத்திற்கான தொகைக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, உடனடியாக ரூ.5.76 லட்சம் பணம் வசூலிக்கப்பட்டது. ரூ.25.27 லட்சம் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள் ராமகிருஷ்ணன், ஏ.நடனம், சமூகசேவர்கள் எம்.தேவதாஸ், இ.பாஸ்கரன், பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் எம்.கே.கண்ணன், வியாபார அபிவிருத்தி பிரிவு மேலாளர் ஆர்.பாஸ்கரன், தனிநபர் கடன் பிரிவு மேலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.