சிதம்பரத்தில் குடிபுகுந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி தேர்தல் பொறுப்பாளராக கே.ஏ.செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார். கடந்த பிப்.11-ம் தேதி முதல்வர் வருகைக்கு முன்பு
தேர்தல் பணியாற்ற அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் சிதம்பரம் நகரில் தனி வீடு வாடகைக்கு வீடு எடுத்து குடிபுகுந்துள்ளார்.
சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி தேர்தல் பொறுப்பாளராக கே.ஏ.செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார். கடந்த பிப்.11-ம் தேதி முதல்வர் வருகைக்கு முன்பு வந்த இவர் சிதம்பரம் மேலபுதுத்தெருவில் தனி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பம்பரம் போல் பணியாற்றி வருகிறார். தேர்தல் முடியும் வரை இவர் சிதம்பரத்தில் தங்கி தேர்தல் பணியாற்றுவார் எனக்கூறப்படுகிறது.
தினமும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளான தமிழகவாழ்வுரிமை கட்சி, மூவேந்தர் முன்னற்றக்கழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் தேர்தல் பிரசார வியூகங்களையும் வகுத்து வருகிறார்.