முகப்பு
தற்போதைய செய்திகள்

நெய்வேலியில் மார்ச் 26-ம் தேதி போராட்டம் நடத்த பிற்படுத்தப் பட்டோர் தொழிற்சங்க பேரவை முடிவு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையை மத்திய உள்துறை அமைச்சகம் வாபல் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து மார்ச் 26-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவது என பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்க பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையை மத்திய உள்துறை அமைச்சகம் வாபல் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து மார்ச் 26-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவது என பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்க பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்க பேரவை கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் பேரவை கடலூர் மாவட்டச் செயலாளர் வீர.வன்னியவேங்கன் வரவேற்றார். மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் கோதண்டபாணி, என்எல்சி ஒபிசி தொழிற்சங்கத் தலைவர் குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் பேரவை அகில இந்திய பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா பங்கேற்று பேசினார்.

தீர்மானங்கள்: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், தொழில் பாதுகாப்பு படையினரால் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த ராஜ்குமார் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments