முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

சிதம்பரம் ஏ.எஸ்.சத்தார் வளாகத்தில் எஸ்.ஏ.டாங்கேவால் உருவாக்கப்பட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாநில செயலாளர் கே.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:47 AM
பகிர்:

சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.

சிதம்பரம் ஏ.எஸ்.சத்தார் வளாகத்தில் எஸ்.ஏ.டாங்கேவால் உருவாக்கப்பட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாநில செயலாளர் கே.கணேசன் தலைமை வகித்தார். காரைக்கால் மாவட்டச் செயலாளர் எஸ்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார். கட்சி பொதுச்செயலாளர் ஜி.பூராசாமி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கே.சி.காமராஜ், எஸ்.பவுன்ராஜ், ஆர்.அலெக்சாண்டர், ஏ.ஆரோக்கியசாமி, பி.அந்தோணிராஜ், கே.பாலு, கே.ஸ்ரீதரன், பி.முனுசாமி, கே.வெண்மணி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், கட்சி தேசிய அமைப்பு செயலாளர் ஜி.பூராசாமியை வேட்பாளராக அறிவித்து போட்டியிடுவது என்றும்,  அதனடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி ஆதவை பெறுவது என்றும், இடது சாரி கட்சிகள் போட்டியிடும் புதுச்சேரி, நாகை, கடலூர் உள்ளிட்ட தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபது என தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.