ஏற்காட்டில் 108 வாகனத்தில் பிறந்த இரட்டை குழந்தை
ஏற்காட்டில் 108 வாகனத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.
ஏற்காட்டில் 108 வாகனத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. சேலம் மாவட்டம், ஏற்காடு வெள்ளக்கடை கிராமம் ராம்குமார் மனைவி மணியம்மாள் (20) புதன்கிழமை காலை 6.40 பிரசவ வலி ஏற்பட்டு ஏற்காடு 108 வாகனத்தில் அழைத்துச் வந்தனர் வாகனத்தில் குழந்தை பிறக்கும் சூழல்நிலை ஏற்பட்டு இரண்டு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது வாகன மருத்துவ உதவியாளர் எம். நடேசன், வாகன ஓட்டுநர் பாலமுருகன் உதவினர். பின்பு மணியம்மாள் குழந்தைகளை நாகலூர் ஆரம்ப சுகாதாரமைய்யத்தில் அனுமதிக்கப்பட்டனர்.