முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது: தொல்.திருமாவளவன்

தமிழர் விரோத நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

தமிழர் விரோத நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ராஜபட்சே தலைமையிலான இலங்கை அரசு போர்குற்றம் மற்றும் மனிதஉரிமைகள் மீறல்களில் ஈடுபட்டுள்ளது குறித்து சுதந்திரமான சர்வதேச புலாணாய்வு விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் புலாணாய்வு விசாரணை ஆணையம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகள் ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ளது. ஆனால் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. இந்தியஅரசின் இச்செயல், தமிழினத்திற்கு விரோதமான செயல். இதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

திரைப்பட இயக்குநர் முத்துசாமி இயக்கிய இனம் திரைப்படத்தில் சிங்களர்களையும், பெளத்துவர்களையும் மனித நேயம் மிக்கவர்களாகவும் சித்தரித்துள்ளது. தமிழர்களை, குறிப்பாக விடுதலைப் புலிகளை வன்முறையாளர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்துள்ளது. இந்த இனம் படத்தை திரையிடக்கூடக்கூடாது. உடனே தமிழகஅரசு இனம் படத்தை திரையிடுவதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழர்கள் உணர்வுகளை காயப்படுத்தும், காட்சிகளை அந்த இயக்குநர் அப்புறப்படுத்த வேண்டும். படம் முழுவதும் அது எதிரொலித்தால் படத்தை அவர் திரையிடக்கூடாது என திருமாவளவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.