ஆக்கிரமிப்பு செய்து, அரசியல் கட்சி அலுவலகம் துவங்கக்கூடாது: சிதம்பரம் உதவிஆட்சியர் அறிவிப்பு
எந்த ஒரு அரசியல் கட்சியும் பொதுமக்களுக்கு சொந்தமான அல்லது அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் அரசியல் கட்சி தேர்தல் அலுவலகம் தொடங்கக்கூடாது என சிதம்பரம்
எந்த ஒரு அரசியல் கட்சியும் பொதுமக்களுக்கு சொந்தமான அல்லது அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் அரசியல் கட்சி தேர்தல் அலுவலகம் தொடங்கக்கூடாது என சிதம்பரம் நாடாளுமனறத் தொகுதி உதவித் தேர்தல் அதிகாரியும், உதவிஆட்சியருமான எம்.அரவிந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், தேர்தல் தொடர்பாகவும், உள்ளூர் பிரசாரம் தொடர்பாகவும், தற்காலிக அலுவலகங்கள் அமைப்பதாக தகவல் வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றி அந்த அலுவலகங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறைகள்: எந்த ஒரு அரசியல் கட்சியும் மதசம்பந்தமான வழிபாட்டுத் தலங்களிலோ, வழிபாட்டு தலங்கள் அமைந்த எல்லைக்குள்ளோ அலுவலகங்களை அமைத்தல் கூடாது, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகாமையிலோ, மேற்படி வளாகத்திலோ கட்சி அலுவலகங்கள் தொடங்கக்கூடாது, வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 200 மீட்டருக்கு உட்பட்ட இடத்தில் கட்சி அலுவலங்கள் தொடங்கப்படக்கூடாது, மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும் கட்சி அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட கட்சி தொடர்பாக சின்னம் அல்லது புகைப்படம் பொறிக்கப்பட்ட ஒரே, ஒரு கொடி, பேனர் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பேனர்கள் 4-8 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.