சிதம்பரத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி!
சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு சிதம்பரம் நகரமன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு சிதம்பரம் நகரமன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் சட்டப்பேரவைத்தொகுதி உதவித் தேர்தல் அதிகாரியும், சிதம்பரம் உதவி ஆட்சியருமான எம்.அரவிந்த் தலைமை வகித்து பயிற்சி வகுப்பை நடத்தினார். புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் அதிகாரியும், மாவட்ட வழங்கல் அலுவலருமான தங்கவேல், வட்டாட்சியர் எம்.விஜயா, தேர்தல் துணை வட்டாட்சியர் மு.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் 44 மண்டல தேர்தல் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து எப்படை பயிற்சி அளிப்பது என்றும், எலக்டிரானிக் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்தும், வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
Advertisement