கேலி செய்ததை தட்டிக் கேட்ட முதியவர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது பேத்தியை கேலி செய்த நபரை தட்டிக் கேட்ட முதியவரைத் தாக்கி காயப்படுதிய வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
தற்போதைய செய்திகள்கேலி செய்ததை தட்டிக் கேட்ட முதியவர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது பேத்தியை கேலி செய்த நபரை தட்டிக் கேட்ட முதியவரைத் தாக்கி காயப்படுதிய வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது பேத்தியை கேலி செய்த நபரை தட்டிக் கேட்ட முதியவரைத் தாக்கி காயப்படுதிய வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மகாராஜபுரம், முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் அ.அஜீஸ் (67). இவரது பேத்தியை இதே இடத்தைச் சேர்ந்த அக்பர் மகன் சித்திக்அலி, பாட்ஷா மகன் கனி ஆகியோர் கிண்டல் கேலி செய்து வந்துள்ளார்கள். இதனை அஜீஸ் தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமுற்ற இருவரும் மாவூத்து விலக்கு அருகே வந்து கொண்டிருந்த அஜூஸை வழிமறித்து கம்பால் அடித்து காயப்படுத்தியுள்ளார்கள்.இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் அஜீஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்திக்அலியை கைது செய்தனர். கனியை தேடி வருகிறார்கள்.