முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 281 மனுக்கள்

ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி 281 மனுக்கள் வரப்பெற்றன.கோரிக்கை மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமாமகேஸ்வரி, திருநெல்வேலி கோட்டாட்சியர் க. சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். நிர்மலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இரா. இளங்கோ, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீரபுத்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அசோகன், பரமசிவன், மாற்றுத் திறனாளி நல அலுவலர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →