நாகர்கோவில்-கச்சிகுடா சிறப்பு ரயிலுக்கு நெல்லையில் வரவேற்பு
நாகர்கோவிலில் இருந்து மதுரை, சேலம், காட்பாடி வழியாக ஆந்திர மாநிலம் கச்சிகுடாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி,
நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயிலுக்கு செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாகர்கோவிலில் இருந்து மதுரை, சேலம், காட்பாடி வழியாக ஆந்திர மாநிலம் கச்சிகுடாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருப்பதி, கடப்பா வழியாக கச்சிகுடாவுக்கு செல்கிறது.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.இதேபோல் ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 4 மணிக்கு கச்சிகுடாவில் புறப்படும் ரயில் அடுத்த நாள் வியாழக்கிழமை இரவு 9.10 மணிக்கு நாகர்கோவில் வந்தடைகிறது.
1595 கி.மீ தொலைவுள்ள வழிதடத்தில் இந்த ரயில் 29.10 மணி நேரத்தில் செல்கிறது. செவ்வாய்க்கிழமை நாகர்கோவிலில் இருந்து இயக்கி வைக்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலுக்கு தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் நிர்வாகி சந்திரமெளலி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நிலைய மேலாளர் வி.எம். செல்லத்துரை மற்றும் ரயில்வே பணியாளர்கள், பயணிகள் கலந்து கொண்டனர்.