விருதுநகர் அருகே சமையல் செய்யும் போது மண்ணெண்ணெய் உடலில் சிதறி தீப்பிடித்ததால் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த சிவரஞ்சனி-ராமசாமி தம்பதியரின் மகள் எல்லம்மாள்(10). இவர் கடந்த திங்கள்கிழமை இரவு தாயார் வெளியில் சென்றிருந்த சமயத்தில் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தாராம். அப்போது, திடீரென அடுப்பில் இருந்த மண்ணெண்ணெய் சிதறி எல்லம்மாள் உடல் மேல் பட்டு திடீரென தீப்பிடித்தது.பின்னர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் ஓடிவந்து சிறுமியை படுகாயத்துடன் மீட்டனர். அதையடுத்து, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் பலனின்றி காலையில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் சிவரஞ்சனி விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.