முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் முதலைகள் நடமாட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம்!

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் தொடர்ந்த பெய்து வரும் கன மழையினால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளதால், முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே சி்தம்பரம் வனச்சரக

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:18 AM
பகிர்:

சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள பகுதிகளில் முதலைகள் நடமாட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் தொடர்ந்த பெய்து வரும் கன மழையினால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளதால், முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே சிதம்பரம் வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் தலைமையில் வனவர் சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர் சிதம்பரம் நேருநகர, பாலமான் வாய்க்கால் கரை பகுதி, கனகசபைநகர் பகுதிகளிலும், நாஞ்சலூர், பூலாமேடு, மண்டபம், வையூர் மற்றும் காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு முதலைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.