தற்போதைய செய்திகள்

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல கோரிக்கை

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டும் என

பெ. விஜயபாஸ்கர்

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய ஆலோசனை குழு கூட்டம், திருச்சி கோட்ட உதவி வணிக மேலாளர் அமுதா தலைமையில் ரயில் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. நிலைய மேலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் ரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், டாக்டர் சந்திரன், பேராசிரியர்கள் நடராஜன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடலூர் முதுநகர்-திருச்சி பயணிகள் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு திருச்சி கோட்ட உதவி வணிக மேலாளர் அமுதா, மேல்அதிகாரியிடம் உங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT