மின்வயரை அகற்ற முயன்ற போது விபரீதம்: கணவன்-மனைவி மின்சாரம் தாக்கி பலி: மகன், மகள் படுகாயம்
நாமக்கல் மாவட்டம் பரத்தி வேலூர் அருகே பாளப்பட்டி எம்.ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி கோமதி. இவர்களது வீட்டில் இன்று மாலை மழைக்காரணமாக
நாமக்கல் மாவட்டம் பரத்தி வேலூர் அருகே பாளப்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி கோமதி. இவர்களது வீட்டில் இன்று மாலை மழைக்காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்துகிடந்தது. அப்போது ரஜேந்திரனும், அவரது மனைவிகோமதியும் மின் யரை அகற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக தூக்கிவிசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் அவரது மகள் மைதிலி, மகன் சரணவன் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.