பாளையங்கோட்டை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தைச் சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகநயினார் (27). கூலித்தொழிலாளி. பஞ்சர் ஓட்டும் தொழிலும் செய்துவந்தார். இவருக்கு மாடத்தி என்ற மனைவியும்,
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தைச் சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகநயினார் (27). கூலித்தொழிலாளி. பஞ்சர் ஓட்டும் தொழிலும் செய்துவந்தார். இவருக்கு மாடத்தி என்ற மனைவியும், நாகலட்சுமி என்ற குழந்தையும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆறுமுகநயினார் வீடுதிரும்பவில்லையாம். அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடினர்.
திங்கள்கிழமை அதிகாலையில் மேலப்பாட்டத்தில் உள்ள கால்வாய்க்கரையோரம் ஆறுமுகநயினார், பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர் (பொ) சுமித்சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன்நாயர் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மேலப்பாட்டத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த கொலைகளுக்கு பழிக்குப்பழியாக ஆறுமுகநயினார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இவ் வழக்கு தொடர்பாக மேலப்பாட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ் மகன் சுரேஷ் (24), தேவேந்திரன் மகன் பொன்முத்துராஜா (23), பழனி மகன் கருத்தப்பாண்டி (29) ஆகியோர் ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
மேலும் சிலரை போலீஸார் தேடி வருகிறார்கள்.