தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களே காரணம்: பி.எஸ். ஞானதேசிகன்

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைசர் ஜி.கே. வாசன் புதிதாக துவங்குவதாக அறிவித்துள்ள கட்சி கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது.

ஜெயப்பாண்டி

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைசர் ஜி.கே. வாசன் புதிதாக துவங்குவதாக அறிவித்துள்ள கட்சி கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது.

இந்த திருச்சி மாநாட்டுக்கு ஆதரவாளர்களை திரட்டும் வகையில் ஜி.கே வாசனின் ஆதரவாளரும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பி.எஸ் ஞானதேசிகன் இன்று மதுரையில் ஜி.கே. வாசனின் புதிய கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

தமிழகத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே காரணம். காமராஜர் ஆட்சி என்றால் நேர்மை, வாய்மை, தூய்மை, சேவை என்பதாகும். இவை 4ம் கொண்ட காமராஜரின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்போம் என்று கூறினார்.

காமராஜர் பெயரை கூறாமல் எந்த அரசியல்வாதியும் இருக்க முடியாது. காமராஜரின் திட்டங்களான முதியோர் ஓய்வூதிய திட்டம், மதிய உணவு திட்டங்களே கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது.

காமராஜர் மூப்பனார். படங்களை தமிழக காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் இடம்பெற செய்ய வேண்டும் என்று ஜி.கே. வாசன் அழுத்தமான உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். அது உண்மை என நிரூபிக்கும் வகையிலேயே காங்கிரஸாரின் இன்றைய செயல்பாடுகள் உள்ளன என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT