தற்போதைய செய்திகள்

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண் கொலை: லாரி டிரைவர் கைது

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் சாமியார் கிணற்றுத் தெருவைச் சேர்ந்த ராமரின் மனைவி லட்சுமி(34). இவருக்கு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். கணவர் இறந்த நிலையில், இவரது மகள் ரம்யா அதே பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மகன் இப்பகுதி பள்ளியில் படித்து வருகிறார். தற்போது, விடுமுறை என்பதால் மகனும், மகளும் லட்சுமியின் சொந்த ஊரன வத்தலக்குண்டு அருகே ராமையாபட்டிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் லட்சுமி மட்டும் வீட்டில் தனியார் இருந்தாராம்.

எனவே கடந்த இரண்டு நாள்களாக கதவை மூடிக் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தலைமையில் போலீஸார் விரைந்து வந்து வீட்டை திறந்த பார்த்தனர். அங்கு லட்சுமி கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தாராம். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்ததில், லாரி டிரைவர் ஒருவர் வீட்டிற்கு வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரித்ததில் மதுரை அருகே விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஈஸ்வரன்(38) என்பவர் தான் வந்து செல்வதாக தெரியவந்தது. உடனே அக்கிராமத்திற்கு திங்கள்கிழமை சென்ற போலீஸார் அவரை  கைது செய்தனர். மேலும், அவரிடம் கொலைக்கான காரணம் குறி்த்து தீவிராக விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT