பண்ருட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவர் பலி
பண்ருட்டி காடாம்புளியூர் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பைக்கை ஓட்டி வந்தவரும், பின்னால் அமர்ந்து வந்த பெண்ணும் உயிரிழந்தனர்.
பண்ருட்டி காடாம்புளியூர் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பைக்கை ஓட்டி வந்தவரும், பின்னால் அமர்ந்து வந்த பெண்ணும் உயிரிழந்தனர்.
காவல்துறை விசாரணையில் இறந்தவர் கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த ராதா ராவணன் மகன் ராஜா (33) எனவும், பின்னால் அமர்ந்து வந்த சுமார் 28 வயது மதிக்கத்தக்க பெண் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
காடாம்புளியூர் காவல்துறையினர் உடல்களைக் ககைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.