முகப்பு
தற்போதைய செய்திகள்

2 மாநில தேர்தல் வெற்றி: நெல்லையில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றியதையடுத்து திருநெல்வேலியில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:03 AM
பகிர்:

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றியதையடுத்து திருநெல்வேலியில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஹரியாணா, மகாராஷ்டிர மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான் வாக்குப்பதிவு கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குஎண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இரு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அங்கும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இருமாநில சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் திருநெல்வேலி சந்திப்பில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தனர். அப் பகுதியில் வந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் கட்டளை எஸ்.ஜோதி தலைமை வகித்தார். தச்சை மண்டலத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.செந்தில்குமார், மாவட்டப் பொதுச்செயலர் எஸ்.வி.குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →