சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவி சாவு
சிதம்பரம் அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் மகள் குணவதி (8). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலுகிறார். இந்நிலையில்
சிதம்பரம் அருகே குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவி ஒருவர் இறந்தார்.
சிதம்பரம் அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் மகள் குணவதி (8). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலுகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் உள்ள தாமரைக்குளத்தில் குணவதி குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தின் நீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸார் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறி்த்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.