மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எம்.சி.சம்பத்
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நீர்நிலைகளையும் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நீர்நிலைகளையும் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக வணிகவரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.அருண்மொழிதேவன் (கடலூர்), எம்.சந்திரகாசி (சிதம்பரம்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னாரகோயில்), மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் ஆகியோர் உடன் சென்றனர்.