பலூன் விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை சாவு
பெரம்பலூர் அருகே, பலூன் துகள்களை விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை மூச்சு திணறி புதன்கிழமை உயரிழந்தது.
பெரம்பலூர் அருகே, பலூன் துகள்களை விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை மூச்சு திணறி புதன்கிழமை உயரிழந்தது.
பெரம்பலூர் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி- பாசமலர் தம்பதியினருக்கு உதயகுமார் (3) மற்றும் பிறந்து 8 மாதத்தில் பிரவின்குமார் ஆகிய குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை காலை குழந்தை உதயகுமார் பலூனை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, பலூன் வெடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து, கிழிந்த பலூன் துகள்களை பிரவின்குமார் விழுங்கி விட்டதாம்.
இதையறிந்த பெற்றோர், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, பிரவின்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த மருவத்தூர் போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.