தனியார் நிறுவன காசாளரிடமிருந்து சம்பளம் வழங்க எடுத்து வந்த ரூ.30 லட்சம் கொள்ளை
கோவை அன்னூர் அருகே அல்லிக்காரன்பாளையம் என்ற இடத்தில் ஒருவரிடம் இருந்து ரூ.30 லட்சம் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டது.
கோவை அன்னூர் அருகே அல்லிக்காரன்பாளையம் என்ற இடத்தில் ஒருவரிடம் இருந்து ரூ.30 லட்சம் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டது.
தனியார் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரியும் அவர் சம்பளப் பணம் வழங்குவதற்காக, வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த இருவர் அவரது முகத்தில் மிளகுப் பொடி தூவி, ரூ. 30 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.