வாலாஜாப் பேட்டையில் தொழிலதிபர் கடத்தல்
வாலாஜா பேட்டையை சேர்ந்த கோபி (54) என்பவர் நேற்று இரவு மர்மநபர்களால் கடத்தப்பட்டர். இவர் ஆற்காட்டில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
வாலாஜா பேட்டையை சேர்ந்த கோபி (54) என்பவர் நேற்று இரவு மர்மநபர்களால் கடத்தப்பட்டர். இவர் ஆற்காட்டில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ஆற்காட்டில் இருந்து வாலாஜாப்பேட்டையிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பும் போது ராணிப்பேட்டை அருகே மர்ம நபர்கள் சிலர் அவரை கடத்தி சென்றனர். பின்னர் கோபின் செல்போனில் இருந்து அவரது தம்பி ராஜூவுக்கு போன் செய்து 40 லட்சம் கேட்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.