ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா செவ்வாய்கிழமை இரவு, லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா செவ்வாய்கிழமை இரவு, லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா செவ்வாய்கிழமை இரவு, லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி தலைமை தாங்கினார். அரிமா சங்கத்தின் செயலாளர் வி.ஆர்.எஸ்.செந்தில்கண்ணன், பொருளாளர் பி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் கு.சக்திவேல் வரவேற்றார். லயன்ஸ் பள்ளிக் குழுவின் தலைவர் எஸ்.குணசேகரன் சிறப்பு விருந்தினர் மதுரை தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி டாக்டர் சி.சாந்தலிங்கத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
விழாவில் மாநில நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற இரு ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்கம் சார்பில் வட்டார அளவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு பெற்ற நகர்மன்ற பெருமாள்பட்டி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எம்.மகேஸ்வரி, செம்பட்டையான்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை எம்.கனகாம்மாள், மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.அலுசோடை, ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.வெங்கடாச்சலம், கான்வென்ட் பள்ளியைச் சேர்ந்த எஸ்.ஞானசௌந்தரி, எம்.டென்னிஸ், லயன்ஸ் பள்ளியைச் சேர்ந்த கே.ஜெயா, வி.நாச்சியார், எம்.முருகேஸ்வரி, ஆர்.சி. பள்ளியைச் சேர்ந்த ஆர்.ராஜமாணிக்கம் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
டாக்டர் சி.சாந்தலிங்கம் சிறப்புரையாற்றினார். விழாவில் லயன்ஸ் பள்ளிக் குழு பொருளாளர் எம்.கே.முகமது மைதீன், அரிமா சங்கத்தின் கே.குமாரவேல், எல்.சாத்தப்பன், பி.ஆர்.ஸ்ரீரெங்கராஜா, தணிக்கையாளர் நாஸர், எஸ்.ஆறுமுகம் உள்பட அரிமா சங்க உறுப்பினர்கள், வத்திராயிருப்பு மற்றும் ஏழாயிரம்பண்ணை அரிமா சங்கத்தின் நிர்வாகிகள், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் கே.சக்திவேல், வி.ஆர்.எஸ்.செந்தில்கண்ணன், பி.கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.