அறந்தாங்கியில் வீடு புகுந்து 15 சவரன் நகை கொள்ளை
புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ரத்தினக் கோட்டை கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பீரோவை உடைத்து 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ரத்தினக் கோட்டை கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பீரோவை உடைத்து 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
ரத்தன கோட்டை கிராமத்தில் வசிக்கும் சுப்பையா எனபவர் பிராய்லர் கோழி வளர்ந்து வந்தார். நேற்று இரவு அவர் வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 15 பவுண் நகையை கொள்ளையடித்தோடு அவரது மனைவி சுதா கழுத்தி இருந்த தங்க சங்கிலையை பறிக்க முயன்றனர்.
அப்போது அவர்களை தடுக்க முயன்ற சுப்பையாவை கட்டையால் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பிச் சென்றனர். இது குறித்து அறாந்தாங்கி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.