நாமக்கல் அருகே மோகனூர் பகுதியில் தென்னை மரத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் பலியாயினர். இன்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள தென்னை மரத்தில் மின்சாரம் கசிந்துள்ளது. அதை அறியாமல் அவர் சென்றபோது, சின்னுசாமி (80) மின்சாரம் பாய்ந்து பலியானார். தொடர்ந்து அவரது மகன் சக்திவேல் (44) மீதும் மின்சாரம் பாய்ந்து அவரும் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.