ஜெயலலிதா கைது: சிதம்பரம் அருகே கிள்ளையில் மீனவர்கள் உண்ணாவிரதம்
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே கிள்ளையில் மீனவர்கள் மற்றும் அதிமுகவினர், கிள்ளை பேரூராட்சி தலைவர் சி.வித்தியாத்தித்தன்
ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே கிள்ளையில் மீனவர்கள் மற்றும் அதிமுகவினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே கிள்ளையில் மீனவர்கள் மற்றும் அதிமுகவினர், கிள்ளை பேரூராட்சி தலைவர் சி.வித்தியாத்தித்தன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரம் இருந்தனர். மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கே.அசோகன், சிதம்பரம் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், தலைமைக்கழக பேச்சாளர்கள் தில்லைகோபி, தில்லைசேகர், சிம்மக்குரல் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவ பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்குமாறு கோஷமிட்டனர். இதேபோன்று கடலோர கிராமங்களான சின்னூர், புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினர்.